×

அதிவேகமாக செல்லும் பஸ்கள்

காரைக்கடி, ஏப். 28: காரைக்குடி நகர் பகுதியில் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்லும் நிலை தொடர்கதையாகி வருகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்பதற்காக பாதசரிகள் மற்றும் டூவீலர்களில் செல்வோரை கண்டுகொள்ளாமல் அவர்களை மோதி தள்ளிவிட்டு செல்கின்றனர். தங்களது பஸ்சுக்கு முன்பு செல்லும் டூவீலர்கள் மீது வேண்டும் என்றே மோதுவது போல் செல்வது, அதிகசத்தத்துடன் ஹாரன்களை ஒலிக்க செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் முன்னால் செல்வோர் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post அதிவேகமாக செல்லும் பஸ்கள் appeared first on Dinakaran.

Tags : Karaikadi ,Karaikudi Nagar ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...